கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை!
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை!
சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதுடன் அன்றைய நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் மார்ச் முதலாம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி அதற்கான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment