7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும்; 9ஆம் திகதிக்குப் பின்னர் மழை - அமைவிடம்
7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும்; 9ஆம் திகதிக்குப் பின்னர் மழை
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உருவாகவுள்ள புதிய காற்று சுழற்சியின் அமைவிடத்தை பார்வையிட LOCATION என்பதை க்ளிக் செய்யவும்.
(READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!)
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தென்மேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகி வருவதாக கூறியுள்ளார். எனினும் இது புயலா அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதைக் கூற முடியாது.
எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும்.

Comments
Post a Comment